கடலட்டை பண்ணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரி மதத்தலைவர்களை சந்திக்கும் மீனவர்கள்

Date:

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதி மீகஹஜந்துர சிறிவிமல தேரரை கடலட்டை பண்ணை விடயம் தொடர்பாக சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

கடலட்டை பண்ணைகளை அமைக்கும் போது அதனை ஆய்வுக்குட்படுத்தி மேற்கொள்ளல், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கடலட்டை பண்ணை தொடர்பாக பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அரசியல் தலைவர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகள் கடலட்டை பண்ணை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மதத்தலைவர்களை சந்தித்து அவர்கள் மூலம் அரசியல் தலைவர்களை அணுகுவதற்காக இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்வதாக கடற்றொழிளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்ததுடன் சகல மதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்றபோது தலைக்கவசம் அணியாத குற்றச்சாட்டில் 3 பேர் கைது

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கு சென்ற போது சமாந்தரமாக, போக்குவரத்து விதிகளை மீறி...

காலை எழுந்ததும் 5 நிமிடங்களுக்கு தொலைபேசியை தொடாதீர்கள்

காலையில் எழுந்தவுடன் முதல் ஐந்து நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை என்றும், உடனடியாகக்...

ஈரான் சனிக்கிழமையன்றே ஒப்பந்தத்தை ஏற்க வாய்ப்பு

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் சனிக்கிழமையன்றே ஏற்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்