பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸாரும் இலங்கை இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதற்கிடையில், தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிப்பதற்காக மற்றொரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறினார்.



