பரீட்சையில் குறைவான புள்ளிகள் பெற்றதால், பாடசாலை கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவி, பெரும் பிரயத்தனத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில், இந்த சம்பவம் நடந்தது.
மண்டபப்பேட்டை ஷாசிஸ் பாடசாலையின் 9ஆம் வகுப்பு மாணவியே திங்கள்கிழமை மாலை பாடசாலைக் கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
பரீட்சையில் குறைவான புள்ளி பெற்றதாலேயே இந்த விபரீத முடிவெடுத்தார்.
இதனையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாடசாலை ஊழியர்களும், போலீசாரும் மாணியுடன் சமயோசிதமாக பேசி, கீழே இறக்கினர்.



