சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.
இன்று பாராளுமன்றத்தில் ஜி.எல்.பீரிஸ் விசேட அறிவிப்பொன்றை விடுத்த பின்னர், 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.
இன்று (31) முதல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமண, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் நாலக கொடஹேவ, பேராசிரியர் குணபால ரத்னசேகர, கலாநிதி உபுல் கலப்பட்டி, கலாநிதி திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயண கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார. குமாரசிறி உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்.



