29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஜோசப் ஸ்டாலின் கைது: ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையாளர் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார்.

“இன்று மாலை 6 மணியளவில் பிரபல மனித உரிமைகள் பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்று இலங்கையில் இருந்து குழப்பமான செய்திகளை நான் கேட்கிறேன்,” என்று அவர் நேற்று ருவிட்டர் செய்தியில் தெரிவித்தார்.

ஜோசப் ஸ்டாலின் போன்ற மனித உரிமைப் பாதுகாவலர்களின் பணி சமீபத்திய வாரங்களில் முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று மேரி லாலர் மேலும் கூறினார்.

மனித உரிமைப் பாதுகாவலர்களின் இத்தகைய செயற்பாடுகள் ஆதரிக்கப்பட வேண்டுமே தவிர தண்டிக்கப்படக் கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment