3 டிஐஜிகள் இடமாற்றம் குறித்து 3 நாட்களில் விளக்கமளிக்க உத்தரவு!

Date:

பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதியின்றி மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் சேயலாளர் நேற்று (31) அறிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி பொலிஸ் மா அதிபரினால் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளர் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 27ம் திகதி, சேவை தேவையை காரணம் காட்டி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் அஜித் ரோஹண, எம்.டி.ஆர்.தமிந்த, ஏ.சில்வா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நெருக்கடி கட்டத்தில் நேட்டோவிற்கு வழங்கப்படும் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள், போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா திட்டம்

நெருக்கடி காலங்களில் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காக வழங்கப்படும் போர் விமானங்கள்,...

காத்தான்குடியில் தீவிபத்து

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு (26) ஏற்பட்ட...

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்