அமெரிக்க நாடாளுமன்றத்தில் 9 பேரை கடித்த நரி கருணைக்கொலை!

Date:

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 9 பேரைக் கடித்த நரி கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது.

நரி கடித்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர், செய்தியாளர் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

வெறிநாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் எனப்படும் நோய் அந்த நரிக்கு இருப்பதாகத் தெரியவந்தது.

அதனையடுத்து அந்த நரியின் மூன்று குட்டிகளும் கருணைக்கொலை செய்யப்பட்டன.

நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த நரிகளை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு குடியிருப்பாளர்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (4) அந்த நரி பற்றிய முறைப்பாடுகள் மக்களிடமிருந்து வரத் தொடங்கின.

அடுத்த நாள் அதைப் பிடித்த காவல்துறை அதற்கு ரேபிஸ் நோய் இருப்பதை உறுதிசெய்தது.

அதன் குட்டிகளும் நோய்க்கு ஆளாகியிருக்கலாம் என்பதால் நேற்று முன்தினம் (7) அவையும் கருணைக்கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

நரியால் கடிபட்ட அனைவரையும் தொடர்புகொள்ளும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்