30.9 C
Jaffna
April 29, 2025
Pagetamil
விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் அள்ளிய வடக்கு வீரர்கள்; முல்லைத்தீவு யுவதிக்கும் தங்கம்!

இந்தியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைதீவு யுவதி யோகராசா நிதர்சனா.

INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் INTERNATIONAL PRO BOXING CHAMPIONSHIPS 2022 போட்டி நேற்று மாலை 5 மணிக்கு, சென்னன, மதுரவாயலில் இலங்கை மற்றும் இந்திய அணியினர்களுக்கிடையில் ஆரம்பமாகி நடைபெற்றது

இப்போட்டியில் இலங்கை அணி சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த எஸ்.சிறீதர்சன், ரி..நாகராஜா ஆகியஇரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த ஈ.கிருஸ்ணவேணி, வை.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்

ஆசிரியர் நந்தகுமார் அவர்களிடம் பயிற்சி பெற்ற குறித்த நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் ஒருவர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்

அந்த வகையில் போட்டியில் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யோகராசா நிதர்சனா என்ற தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் யுவதியும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

-சண்முகம் தவசீலன்-

இதையும் படியுங்கள்

மாட்ரிட் ஓபன் முதல் சுற்றில் ஜோகோவிச் தோல்வி

Pagetamil

சிஎஸ்கே அணியில் 17 வயது அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே: ருதுராஜுக்கு மாற்று வீரர்!

Pagetamil

தோனி அவுட்டால் பிரபலமான ரசிகை: இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

Pagetamil

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

Leave a Comment