மாலைதீவில் மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்து வீரர் டக்ஸன் பியூஸ்லஸ் மரணம் குறித்து முழு அளவிலான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவரது தாய் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
தனது மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் இடம்பெறும் திவேஹி பிரீமியர் லீக் போட்டியில் மாலைதீவின் வலென்சியா அணிக்காக ஆடும், இலங்கையை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் தனது தங்குமிடத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கடந்த 26ஆம் திகதி நடந்த போட்டியில் அவர் காயம் காரணமாக ஆடவில்லை. அன்றைய தினம் அவரது தங்குமிடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாலைதீவு பொலிசார் தெரிவித்தனர்.
மன்னார் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய டக்ஸன் பியூஸ்லஸ், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்றவர். இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியிலும், வடமராட்சி வதிரி டயமன்ட்ஸ் அணியிலும், மாலைதீவின் வலென்சியா அணி இடம்பெற்றிருந்தார்.
தனது மகன் தற்கொலை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை என அவரது தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மன்னாரிலுள்ள டக்ஸன் பியூஸ்லஸின் தாயாரிடம் மன்னார் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதன்போதே, மேற்படி சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.



