தலைக்கவசம், சாரதி அனுமதிப்பத்திரமின்றி சவாரிவிட்ட மாணவர்கள் விபத்து: ஒருவர் பலி!

Date:

திருகோணமலை – உவர்மலை பகுதியில் பாடசாலை மாணவன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளானதில், அதனை செலுத்திச் சென்ற 15 வயதான மாணவன்  உயிரிழந்துள்ளார்.

அதில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்தனர்.

நேற்று (01) இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாது.

திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த கே.வை. சஹன் மதுசங்க (15) என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவன் தனது மூத்த சகோதரனின் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாத இரண்டு நண்பர்களை ஏற்றிக் கொண்டு உவர்மலை பகுதியில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த ஏனைய இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்த மாணவருக்கோ அல்லது காயமடைந்தவர்களுக்கோ செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் – கிராம மக்கள் இடையே மோதல்

எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச்...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஈரானின் இராணுவம் சனிக்கிழமையன்று ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்தது. இதைத்...

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்