எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் – கிராம மக்கள் இடையே மோதல்

Date:

எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச் சேர்ந்​தவர்​களுக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. கற்​களை வீசி எறிந்து தாக்​குதலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

எட்​டயபுரம் அருகே சுரைக்​காய்​பட்டி ஊராட்​சிக்கு உட்​பட்ட குளத்​துள்​வாய்​பட்டி கிராமத்​தில் உள்ள இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமில் 44 வீடு​கள் அமைந்​துள்​ளன. கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு இலங்கை தமிழர் முகாமில் உள்​ளவர்​களுக்கு அரசு சார்​பில் வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்​டன. அதன் பின்​னர் குளத்​துள்​வாய்​பட்டி கிராம மக்​கள் தங்​களது விவ​சாய நிலங்​களுக்கு செல்​வ​தில் பிரச்​சினை உரு​வானது.

இலங்கை தமிழர் முகாமில் உள்​ளவர்​களை கண்​காணிக்க வேண்​டும். இப்​பகு​தி​யில் போதைப் பொருள் நடமாட்​டம் அதி​க​மாக உள்​ள​தால், குளத்​துள்​வாய்​பட்​டி​யில் புறக்​காவல் நிலை​யம் அமைக்க வேண்​டும் என கிராம மக்​கள் கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். ஆனால், வட்​டாட்​சி​யர் உள்​ளிட்ட அதி​காரி​கள் தரப்​பில் எந்​தவொரு தீர்​வும் எட்​டப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் விளை நிலங்​களுக்கு செல்​வதற்​கான பாதை​யில் கிராம மக்​கள் சரளை மண் கொட்டி சமப்​படுத்​தினர். இதற்கு முகாமைச் சேர்ந்​தவர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதையடுத்து நேற்று காலை கிராம மக்​கள் திரண்டு முகாமில் உள்ள வீடு​களை முற்​றுகை​யிடச் சென்​றனர். அப்​போது கிராம மக்​களுக்​கும், முகாமைச் சேர்ந்​தவர்​களுக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. ஒரு கட்​டத்​தில் இரண்டு தரப்​பினரும் கற்​களை வீசி தாக்​குதலில் ஈடு​பட்​டனர். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டது.

தகவல் அறிந்து டிஎஸ்பி-க்​கள் சுந்​தர​பாண்​டியன், ஜெக​நாதன், காவல் ஆய்​வாளர்​கள் மணி​கண்​டன், உமா மகேஸ்​வரி மற்​றும் நூற்​றுக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். தொடர்ந்து வட்​டாட்​சி​யர் சுபா மற்​றும் வரு​வாய்த்​துறை​யினர் அங்கு வந்து இருதரப்​பினரிட​மும் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

எனினும், நேற்று மாலை வரை பிரச்​சினை முடிவுக்கு வரவில்லை. இருதப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அவர்களிடம் தொடர்ந்து வரு​வாய்த்​துறையினரும், போலீஸாரும் பேச்​சு​ நடத்தி வரு​கின்​றனர்​.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்