யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் பெண்ணொருவரை அடித்துக் கொன்ற சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை சந்தேகநபர் கைதானார்.
பெப்ரவரி 22ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் நடந்தது.
சோமசுந்திரம் அவனியூ பகுதியில் வீட்டின் கீழ்த்தளத்தில் தனித்திருந்த வயோதிப பெண் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். அவரது பின் தலையில் கோடாரியால் தாக்கப்பட்டிருந்தார்.
இந்த கொலையை செய்தவர் வீட்டிலிருந்து வெளியில் செல்லும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், கொலை நடந்த இடத்திற்கு அண்மையாக உள்ள முழவை சந்தி பகுதியில் தச்சு தொழிலகம் ஒன்றில் பணியாற்றிய புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த இளைஞர் ஒருவரே கைதானார்.



