ஆரம்பித்தது போர்; ‘யாரும் தலையிட முயன்றால் கடும் விளைவை சந்திப்பீர்கள்’: ரஷ்யா அறிவிப்பு!

Date:

கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது என ரஷ்யா ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்

கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் பகுதியில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கூறிய புடின், உக்ரைன்இ ராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

“நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்,” என்று அவர் தொலைக்காட்சியில் அறிவித்தார்.

உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புடின் கூறினார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். இரத்தக்களரிக்கான பொறுப்பு உக்ரேனிய “ஆட்சிக்கு” உள்ளது என்று புடின் கூறினார்.

ரஷ்ய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் “அவர்கள் இதுவரை கண்டிராத விளைவுகளை” ஏற்படுத்தும் என்று புடின் மற்ற நாடுகளை எச்சரித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்