பெப்ரவரி 14ஆம் திகதி வரை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்,
தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான மின்சார உற்பத்தி உறுதி செய்யப்பட்டுள்ளதால், மின்சார விநியோகம் தடைபடாது என்றார்.
எவ்வாறாயினும், மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



