கட்டுவன் – மயிலிட்டி வீதியில் தனியார் காணிகளிற்குள்ளால் வீதி அமைக்கும் பணியை நிறுத்துங்கள்: வலி வடக்கு பிரதேசசபை இராணுவத்திற்கு அறிவித்தல்!

Date:

கட்டுவன்- மயிலிட்டி வீதிக்கு பதிலாக தனியார் காணிகளிற்குள்ளால் இராணுவம் அடாவடியாக அமைக்கும் வீதியை அனுமதிக்க முடியாது என்றும், அந்த வீதி அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலி வடக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில், தனியார் காணிக்குள்ளால் வீதியமைக்கும் பணியை நிறுத்தும்படியும், அருகிலேயே இராணுவத்தின் பிடியில் உள்ள வீதியை விடுவிக்க வேண்டுமென்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இராணுவத்தினருக்கு வலி வடக்கு பிரதேசசபை எழுத்து மூலம் அறிவிக்க தீர்மானித்துள்ளது.

இதையும் படியுங்கள்: கட்டுவன் – மயிலிட்டி வீதியில் தனியார் காணிகளில் வீதியமைத்து பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட முயற்சி: இராணுவம் அடாவடி நடவடிக்கை!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதியை விடுவிப்பதற்கு பதிலாக, உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லையிலுள்ள தனியார் காணிகளிற்குள்ளால் புதிய வீதியொன்றை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.

இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

காணி உரிமையாளர்கள் இது தொடர்பில் வலி வடக்கு பிரதேசசபையில் முறைிட்டுள்ளனர்.

இதைடுத்து, இன்று இடம்பெற்ற வலி வடக்கு பிரதேசசபை அமர்வில் இந்த விடயம் ஆராயப்பட்டது.

இதன்போது, பொதுமக்களின் காணிகளிற்குள்ளால் அடாவடியாக வீதியமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தும் படியும், அந்த வீதிப் பணியை அனுமதிக்க முடியாதென்றும், இராணுவத்தின் பிடியிலுள்ள வீதியை விடுவிக்குமாறும் குறிப்பிட்டு வீதி அதிகாரசபை மற்றும் இராணுவத்தினருக்கு எழுத்துமூலம் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரீல்ஸ் எடுக்க 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய சிறுவன் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், ரீல்ஸ் எடுப்பதற்காக 60 அடி உயர...

வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை மாமல்லபுரம் ‘ரிசார்ட்’டில் பாதுகாக்க திட்டம்: நிர்வாகிகள் ரகசிய ஏற்பாடு

இன்று வெளி​யாகும் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு தனது கட்சி எம்​எல்​ஏ-க்​களை பாது​காக்க...

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்