கல்கிசை இரத்மலானையில் அமைந்துள்ள விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முகாமையாளரையும் மேலும் ஐந்து பெண்களையும் கைது செய்துள்ளனர்.
அந்த விடுதியில் 3,000 முதல் 5,000 ரூபாய் வரையில் பெண்கள் விற்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 41 வயதுடைய வக்வெல்ல, மொரட்டுவ, மடுல்சீமை, வக்வெல்ல, பாணந்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.




