கிளிநொச்சிப் பெண் கொலை: 22 வயது கணவன், 19 வயது மனைவிக்கு விளக்கமறியல்!

Date:

கிளிநொச்சியில் வயோதிபப் பெண்ணொருவரை கொலை செய்த சந்தேக நபர்களான 22 வயதான கணவனையும், 19 வயதான மனைவியையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூநகரி தம்பிராயை சேர்ந்த இராசேந்திரம் இராசலட்சுமி (67) என்பவரே கொல்லப்பட்டார்.

அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். பிரித்தானியாவில் தனது மகனுடன் தங்கியிருந்த அவர், கடந்த 3 வருடங்களின் முன்னர் நாடு திரும்பியிருந்தார்.

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் தங்கியிருந்த அவர், கடந்த 26ஆம் திகதி கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கொலைச்சந்தேகநபர்களான 22 வயதுடைய இளைஞன் மற்றும், துணைபுரிந்த அவரது 19 வயதான மனைவி இருவரும் நேற்று மாலை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இதன் போது இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12.01.2022 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்