இலங்கை மத்திய வங்கியின் ஊடாக பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதிலும், தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தலைவர் ரஞ்சித் விதானகே, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், மத்திய வங்கியின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என்றும், அதற்கு பதிலாக மத்திய வங்கியுடன் பேசுமாறும் வங்கிகளாலும் நிதி நிறுவனங்களாலும் நுகர்வோரிடம் கூறப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சித்ததாகவும், மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கம் உண்மையான விருப்பத்தை கொண்டிருக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் அப்பட்டமாக மீறப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுமக்கள் அநீதியை எதிர்கொள்வதாவும், பட்டப்பகலில் வாகனங்களை பறிமுதல் செய்யவோ அல்லது பறிமுதல் செய்யவோ வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.




