அரசாங்கத்தை தக்கவைக்க மூன்றில் இரண்டு தேவையில்லை!

Date:

அரசாங்கத்தை தக்கவைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

திருத்தத்திற்கு வாக்களிக்கும் போது மட்டுமே மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்றார்.

நீதித்துறையில் அரசாங்கம் செல்வாக்கு செலுத்தவில்லை எனவும் அமைச்சர் ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சிக் காலத்தில் அரசியல் பழிவாங்கும் நோக்கிலேயே நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்த அமைச்சர், தற்போதைய அரசாங்கமும் அவ்வாறே செய்தால், இரண்டு அரசாங்கங்களும் வித்தியாசமாக இருக்காது என்றும் கூறினார்.

நீதித்துறையில் தலையிடப்போவதில்லை என ஜனாதிபதியும் தெளிவாக கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்