பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடக தளங்களை கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் முடக்கிய உலகளாவிய செயலிழப்புக்குப் பிறகு, பெரும்பாலான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களின் சேவை மீட்டெடுக்கப்பட்டது.
பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் மெசேஜிங் செயலி திங்கள்கிழமை பிற்பகலில் சிக்கல்களை எதிர்கொண்டது. பின்னர் இன்ஸ்கிராம்,பேஸ்புக்கும் செயலிழந்தன.
பேஸ்புக் பயனர்களிடம் மன்னிப்பு கேட்டது, செயலிழப்புக்குப் பிறகு ஓரளவு அணுகலை மீட்டெடுத்ததை உறுதி செய்தது.
“எங்களை நம்பியிருக்கும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மற்றும் வணிகங்களின் மிகப்பெரிய சமூகத்திற்கு: நாங்கள் வருந்துகிறோம்” என்று பேஸ்புக் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
“எங்கள் பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மீட்டெடுக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம், அவர்கள் இப்போது ஒன்லைனில் திரும்பி வருகிறார்கள் என்று தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”
செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளம் Downdetector.com, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து கொலம்பியா மற்றும் சிங்கப்பூர் வரையிலான பகுதிகளிலிருந்து பிரச்சனைகளின் 10.6 மில்லியன் அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகக் கூறியது.
பேஸ்புக் நிறுவனத்தின் ட்விட்டரில் “சிலருக்கு எங்கள் செயலிகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிக்கல் இருப்பதை அறிந்தேன்” என்று கூறியது.
“முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்” என்று நிறுவனம் கூறியது, பிரச்சனைக்கு என்ன காரணம் என்று குறிப்பிடாமல். செயலிழப்பை உறுதிப்படுத்தும் இதே போன்ற செய்தி வாட்ஸ்அப்பின் ட்விட்டர் கணக்கிலும் வெளியிடப்பட்டது.
பேஸ்புக் நிறுவனத்தின் சமூக ஊடகங்கள் 2019 ஆம் ஆண்டு சந்தித்த தொழில்நுட்ப செயலிழப்பை விட, நேற்றைய செயலிழப்பே மிக நீண்டது. இதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. தொழில்நுட்ப சிக்கல் என்று மாத்திரமே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்தன.
6 மணித்தியாலங்களின் பின் நிலைமை சீரானது.



