காணாமல் போன தரவு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கீழ் கொண்டு வருவதுடன், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமனவின் அதிகாரத்திலிருந்து நீக்குமாறு சுகாதார நிபுணர்களின் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில், அமைச்சர் சன்ன ஜயசுமண அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தரவு சம்பவம் குறித்து அறிக்கைகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டினார்
ஜெயசுமனவிடம் இதுபற்றி கேள்வியெழுப்பப்பட்ட போது, அதனை நிராகரித்து, இந்த சம்பவத்திற்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு என்று கூறியதாகவும், இவை வெறும் அறிக்கைகளாக அல்லாமல் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.




