பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் முறை மூலம் தொழில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை திறன் அபிவிருத்தி அமைச்சு தொடங்கியுள்ளது.
ஒன்லைன் கல்வியில் பல படிகளை முடித்தவுடன் மாணவர்கள் NVQ நிலை சான்றிதழைப் பெற முடியும்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, பாடத்திட்டம் டிவி சனல்கள், யூடியூப் அல்லது பேஸ்புக் மூலம் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை நடத்தப்படும் என்றார்.
இறுதியில் அவர்கள் எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சிக்காக ஒரு தொழிற்கல்வி நிறுவனத்துடன் இணைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அரம்பேபோலா கூறினார்.




