மகளை இரண்டாம் தாரமாக்கிய இளைஞன் மீது அசிட் வீசிய தாயார்!

Date:

தமது விருப்பத்திற்கு மாறாக மகளை திருமணம் செய்தவர் மீது, அசிட் தாக்குதல் நடத்திய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேடகம இலுகும்புர-பதுல்லகொல்ல பகுதியில் நேற்று முன்தினம் (22) இந்த சம்பவம் நடந்தது.

ஏற்கனவே திருமணமாகி, மனைவியை பிரிந்த ஒருவர், யுவதியொருவரை காதலித்துள்ளார். யுவதியின் பெற்றோர் அதற்கு உடன்படவில்லை. எனினும், யுவதியும், காதலனும் இரகசியமாக திருமணம் முடித்தனர்.

நேற்று முன்தினம் இரவு யுவதியின் வீட்டுக்கு சென்ற காதலன், அவரை அழைத்து செல்ல முயன்ற போது, யுவதியின் தாயார், இளைஞன் மீது அசிட் வீசியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தற்போது மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அசிட் வீசிய பெண்ணை மேடகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்