29.5 C
Jaffna
March 28, 2024
குற்றம்

மகளை இரண்டாம் தாரமாக்கிய இளைஞன் மீது அசிட் வீசிய தாயார்!

தமது விருப்பத்திற்கு மாறாக மகளை திருமணம் செய்தவர் மீது, அசிட் தாக்குதல் நடத்திய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேடகம இலுகும்புர-பதுல்லகொல்ல பகுதியில் நேற்று முன்தினம் (22) இந்த சம்பவம் நடந்தது.

ஏற்கனவே திருமணமாகி, மனைவியை பிரிந்த ஒருவர், யுவதியொருவரை காதலித்துள்ளார். யுவதியின் பெற்றோர் அதற்கு உடன்படவில்லை. எனினும், யுவதியும், காதலனும் இரகசியமாக திருமணம் முடித்தனர்.

நேற்று முன்தினம் இரவு யுவதியின் வீட்டுக்கு சென்ற காதலன், அவரை அழைத்து செல்ல முயன்ற போது, யுவதியின் தாயார், இளைஞன் மீது அசிட் வீசியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தற்போது மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அசிட் வீசிய பெண்ணை மேடகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment