மாணவர்களிற்கு தடுப்பூசி செலுத்தும் போது முன்னுரிமையளிக்கப்பட வேண்டியவர்கள்!

Date:

இயல்பான நோய்கள் உள்ள மாணவர்கள் மற்றும் சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தொற்றும் மாணவர்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஹேரத் ஊடக சந்திப்பில் பேசுகையில், சிறப்பு மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மருத்துவமனை மூலம் பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி போட வேண்டும் என்றார்.

தடுப்பூசி செலுத்தப்படும் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்கள் குறித்த முன்மொழிவுகளை தொழில்நுட்ப குழுக்களுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பலமுறை சமர்ப்பித்துள்ளதாக வைத்தியர் ஹேரத் கூறினார்.

பாடசாலைகளில் 90% க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் தற்போது வரை முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகள் நடத்துபவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளிற்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று  கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்