27.6 C
Jaffna
March 28, 2024
இலங்கை

வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் மாயம்!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் எல்லை தாண்டிய இந்திய மீனவ படகு மோதியதில் படகு சேதமடைந்த நிலையில் இருவர் கரை சேர்ந்ததுள்ளனர். மற்றுமொரு படகும் இரு மீனவர்களை காணவில்லை என சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

நேற்று கடலிற்கு தொழிலிற்க்காக சென்ற படகை எல்லை தாண்டிய இந்திய மீன்பிடி படகு மோதியதில் ஒரு படகு பலத்த சேதமாகியுள்ளதாகவும் சேதமான ஒருபடகில் சென்ற இருவரும், சேதமடைந்த படகுடன் கரை திரும்பியதாகவும் குறிப்பிட்டார்.

மேலுமொரு படகு கடலில் மீன்பிடித்்தொழிலுக்கு்சென்ற நிலையில் அதில் சென்ற இரண்டு பேரையும் காணவில்லை என்றும் தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கின்றன.

ராகவன் மற்றும் வளயா எனும் இருவருமே இதுவரை கரை திரும்பவில்லை என மீனவர் சங்க தகவல்கள் தெரிவிப்பதுடன் மீனவர்களால் தேடப்பட்டு இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது கடற்படை தேடிவருகின்றனர்.

காணாமல் போன மீனவர்களது வலைகள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment