மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்த 11 வயதான பிக்கு மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய பௌத்த பிக்கு ஒருவரை இன்று (25) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிமாவட்டத்தை சேர்ந்த 11 வயதுடைய பிக்கு மாணவன், விகாரையில் தங்கியிருந்து படித்து வருகிறார். விகாரையின் பிரதம பிக்கு நீண்டகாலமாக சிறுவனை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
பிரதம பிக்குவின் சேட்டைகளை சகிக்க முடியாத நிலையில் இன்று (25) சிறுவன் பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்
இதனையடுத்து பிரதம பிக்குவை கைது செய்ததுடன் பிக்கு மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



