11 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!

Date:

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்த 11 வயதான பிக்கு மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய பௌத்த பிக்கு ஒருவரை இன்று (25) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிமாவட்டத்தை சேர்ந்த 11 வயதுடைய பிக்கு மாணவன், விகாரையில் தங்கியிருந்து படித்து வருகிறார். விகாரையின் பிரதம பிக்கு நீண்டகாலமாக சிறுவனை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

பிரதம பிக்குவின் சேட்டைகளை சகிக்க முடியாத நிலையில் இன்று (25) சிறுவன் பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்

இதனையடுத்து பிரதம பிக்குவை கைது செய்ததுடன் பிக்கு மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்