23.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளத்தில் வெட்டு விழுகிறதா?: அரசாங்கம் வெளியிட்ட தகவல்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசாங்கம் இன்று (24) தெளிவுபடுத்தியுள்ளது.

அமைச்சரவையின் இணைப் பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுகையில், அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கோவிட் நிதிக்கு நன்கொடையாக அளிக்கும் முடிவு, அரசு துறையில் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என்றார்.

இன்று வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்க அமைச்சரவை நேற்று முடிவு செய்திருந்தது.

அமைச்சரவை அதன் வாராந்திர கூட்டத்திற்கு நேற்று கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு அரச துறையிலோ அல்லது தனியார் துறையிலோ ஊதியக் குறைப்புக்கான முயற்சியாகும் என்ற தகவலில் உண்மையில்லை என்று அழகப்பெரும கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

Leave a Comment