நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை குறித்து தவறான தகவல்களை பரப்பிய சில நபர்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இராஜாங்க அமைச்சர், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தவறான தகவல்களை பரப்புவது மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது பயங்கரவாத செயல் என்று கூறினார்.
இவை சீர்குலைக்கும் செயல்கள் என்று அவர், விசாரணைகளைத் தொடங்க காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.



