தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு சர்வதேச விசாரணை அவசியம்; யாழ் மாநகரசபையில் தீர்மானம்: ஈ.பி.டி.பியும் எதிர்ப்பில்லை!

Date:

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் மூலம், அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தின் மூலம் நீதி வழங்கப்பட வேண்டும் என யாழ் மாநகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு, ஈ.பி.டி.பி கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று (19) இடம்பெற்றது. விளம்பர பலகை விவகாரம் நேற்று நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டதால், திட்டமிட்டபடி நேற்று ஏனைய விடயங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, அந்த விடயங்களை விவாதிக்க இன்று மேலதிக நாள் ஒதுக்கப்பட்டு, இன்று மாநகரசபை அமர்வு இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அதிருப்தியாளர் அணியான மணிவண்ணன் தரப்பை சேர்ந்த வி.பார்த்தீபனால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் மூலம், அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தின் மூலம் நீதி வழங்கப்பட வேண்டும். இந்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ராகிணி முன்மொழிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வித்தியானந்தன் வழிமொழிந்தார்.

தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்