சிட்னியில் முடக்கநிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது!

Date:

அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில் நடப்பில் உள்ள முடக்கநிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அங்கு பகுதி-ஊரடங்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அந்நகர், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது.

வெளியே செல்லும்போது, அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் அறிவித்துள்ளார்.

வெளிப்புற உடற்பயிற்சியில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஈடுபடலாம்.

வைரஸ் பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பெரெஜிக்லியன் தெரிவித்தார்.

பலர் தொடர்ந்து விதிமுறைகளை மீறுவதாகவும் அவர் சொன்னார்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் புதிதாய் 644 பேருக்குக் வைரஸ் தொற்று உறுதியானது. அவர்களில் பெரும்பாலோர் சிட்னி நகரைச் சேர்ந்தவர்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்