பும்ராவிற்குக் குவியும் அட்வைஸ்கள்

Date:

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி துவங்கியது. கிரிக்கெட்டின் தாயகம் எனக் கருதப்படும் லார்ட்ஸில் இப்போட்டி நடைபெற்றதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் நான்கு நாட்களில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருந்த நிலையில் கடைசி நாளில் இந்திய டெய்ல் என்டர்ஸ் பும்ரா, ஷமி இருவரும் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இங்கிலாந்து எதிராக மெகா இலக்கை நிர்ணயம் செய்தார்கள். இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 272 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கி, 120/10 ரன்கள் மட்டும் சேர்த்து 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

கடைசி நாளில் அபாரமாகச் செயல்பட்டு, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதேபோல், படுமோசமாகச் சொதப்பி 60 ஓவர்களில் ஆல்-அவுட் ஆன இங்கிலாந்து அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

பும்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் அதேவேளையில், அட்வைஸும் குவிந்து வருகிறது. காரணம், இங்கிலாந்து எதிரான இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் இவர் 15 நோ-பால்கள் வீசியதால்தான். குறிப்பாக ஒரு ஓவரில் 4 நோபால்களை வீசி சொதப்பினார். இதனால்தான் இவருக்கு பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மாண்டி ஜோண்டகியும் பும்ராவுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “நான் எப்போதுமே நீண்ட தூரம் ஓடி வந்துதான் பந்துவீசுவேன். எனக்கு தெரிந்து ஒரு ஓவருக்கு பத்து பந்துகளை நான் போட்டது கிடையாது. ஒரே ஓவரில் நான்கு நோ-பால்களை வீசியது கிடையாது. நோ-பால் வீசிவிடக் கூடாது என்பதற்காக நான் ரன் அப்பிற்காக கடுமையாக பயிற்சிகளை செய்து வந்தேன். பும்ரா மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவர் தனது ரன் அப்பிற்காக கூடுதல் பயிற்சி செய்தால் நிச்சயம் அதிக நோ-பால்களை வீச மாட்டார்” எனக் கூறினார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25 முதல் 29 வரை ஹெட்டிங்கிலியின் நடைபெறவுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்