முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் உயிலங்குளம் வேட்டையடைப்பு பிள்ளையார் ஆலயம் இன்று (20) பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
இன்று காலை ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா மற்றும் அன்னாதான நிகழ்வின் போது ஆலய தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் கலந்து கொண்டிருந்தார்கள்.
இது தொடர்பான தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார அதிகாரிகள், சுகாதார விதிமுறை மீறப்பட்டதை அவதானித்து, ஆலயத்தை தனிமைப்படுத்தினர்.
அத்துடன், இன்று பூஜை வழிபாடுகளை நடத்திய பூசகர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



