சிம்புவுக்கு ரெட் கார்டா: சிம்புவின் தாயார் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்

Date:

சிம்புவின் தாயார் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்!

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட விவகாரம் தொடர்பாக அண்மையில் வீடியோ ஒன்றில் பேசிய சிம்புவின் தாயார் உஷா டி.ராஜேந்தர், அதில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் சிலம்பரசன். அவருக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை, பட வெளியீட்டுக்கு முன்பு கொடுக்கிறேன் என்று சொன்ன மைக்கேல் ராயப்பன் கொடுக்கவில்லை. எனது மீதி சம்பளத்தைக் கொடுத்துவிட்டு படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார் சிலம்பரசன். பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிலம்பரசனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விட்டுக் கொடுத்தால் மட்டுமே, படம் நாளை வெளியாகும் என்றார் மைக்கேல் ராயப்பன்.

சிலம்பரசனும் பணமே வரவிட்டாலும் பரவாயில்லை என்றாலும், படத்தைத் தேர்ந்தெடுத்து தயாரிப்பாளர் வெளியிடட்டும் என்று சொல்லிவிட்டார் என அறிவித்தார். தொடர்ந்து
உஷா ராஜேந்தர் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மைக்கேல் ராயப்பன், ‘AAA’ படம் தவிர சிம்பு இன்னொரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போடக் கேட்டேன். அதற்காகத்தான் 75 லட்சம் தருவதாகக் கூறினேன். அவருக்கு தந்ததில் ஒரு செக் பவுன்ஸானது.

அந்தத் தொகையை மறுநாளே டிடி எடுத்து தந்துவிட்டேன். ஆனால், சிம்பு இன்னும் அந்த செக்கை திருப்பித் தராமல் வைத்துள்ளார் என்று புதிதாக ஒரு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். அவரின் இந்த புதிய குற்றச்சாட்டுக்கு சிம்பு தரப்பில் இருந்து என்ன மாதிரியான பதில் வர போகிறது என்று அறியப்பட்ட கோலிவுட் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது.

சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வரும் இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்து நடிக்கிறார் சிம்பு. இந்த படத்தில் அவரின் அம்மாவாக ராதிகா சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி நடந்து வருவது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்