மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள காட்மோர் தோட்டத்தை சேர்ந்த தாயொருவர் பிரசவித்த சிசு, கொரோனா தொற்றினால் உயிரிழந்தது.
அந்தப் பெண் அண்மையில் பிரசவத்திற்காக டிக்கோயா, கிளங்கள் மகப்பேற்று வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
அந்த பெண்ணின் கணவனிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கும் தொற்று உறுதியானது.
இந்த நிலையில், அந்த பெண் ஆண் சிசுவொன்றை பிரசவித்தார். எனினும், சிசு உயிரிழந்து விட்டது.
சிசுவிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.




