கோவில்பாளையம்- தடுப்பூசி முகாமில், தொற்று பரிசோதனை செய்ய, பொதுமக்கள் எதிர்ப்பு!

Date:

தடுப்பூசி முகாம்களில் தொற்று பரிசோதனைக்கு எதிர்ப்பு!

கோவில்பாளையம்-தடுப்பூசி முகாமில், தொற்று பரிசோதனை செய்ய, பொதுமக்கள் எதிர்ப்பு. கொண்டையம்பாளையம் ஊராட்சி, கோட்டைப்பாளையம் நடுநிலைப் பள்ளியில், நேற்று தடுப்பூசி முகாம் நடந்தது .150 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது. 300 க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றனர்.முகாம் நடைபெறும், வளாகத்திலேயே தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதைப்பார்த்த மக்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளை.’தடுப்பூசி போடுவோர் மற்றும் வரிசையில் நிற்போரிடம், தொற்று பரிசோதனை செய்யக் கூடாது. தொற்று பரிசோதனை முகாமை, வேறு இடத்தில் நடத்த வேண்டும். விருப்பம் உள்ளோருக்கு மட்டுமே, தொற்று பரிசோதனை செய்யவேண்டும் ‘என்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வருகின்றனர். பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்துனர். ‘தொற்று பரிசோதனை செய்வதன் மூலம் தொற்று பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி, தொற்று பரவலை தடுக்க முடியும். ஒத்துழைப்பு தாருங்கள் ‘, என்றனர்.எனினும், பொதுமக்கள் தடுப்பூசி முகாம் நடக்கும் இடத்தில், தொற்று பரிசோதனை செய்யக் கூடாது, என்று தொடர்ந்து வலியுறுத்தி, ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுத்து, கலைந்து சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்