தேனிக்கள் கொட்டியதில் உயிரிழந்த முதியவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட குமாரசாமிபுரம் பகுதில் குளவிக்கொட்டு சம்பவம் நேற்று முன்தினம் (8) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தேன் எடுத்துக் கொண்டிருக்கையில் தேனிக்களால் கொட்டப்பட்ட நிலையில், தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 64 வயதுடைய கதிரேசு செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொவிட் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.




