மன்னார் மாவட்டத்தில் சினோபார்ம் 2வது தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு

Date:

மன்னார் மாவட்டத்தில் கடந்த யூலை மாதம் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு இன்று திங்கட்கிழமை(9) முதல் 2வது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம்,6 ஆம்,7 ஆம் திகதிகளில் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி மன்னார் பிராந்திய சேவைகள் பணிமனை,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து இன்று திங்கட்கிழமை (9) முதல் வழங்கி வருகின்றனர்.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இன்று காலை 8 மணி முதல் மதியம் 5 மணி வரை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் தடுப்பீசி செலுத்தும் நடவடிகை இடம் பெற்று வருவதுடன் பேசாலை சென் மேரிஸ் கல்லூரியிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது,

மேலும் இன்றைய தினம் மாலை 2 மணி முதல் 4.30 மணி வரை எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை,மற்றும் தலைமன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றில் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2வது தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்