பலாலி அன்ரனிபுரத்தில் ஐந்து மீனவர்களின் வாடி, படகு, வலைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பலாலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீள்குடியேறிய பின் தமது வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் படகு எரிந்து அழிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.




