வரணி பகுதியில் ஆலய திருப்பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் மீது சுமார் 20 பேர் கொண்ட இளைஞர் குழு நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (6) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.
வரணி மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள ஆலயத்தில் திருப்பணியில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரரான, கொக்குவிலை சேர்ந்த 26 வயதான இளைஞனே படுகாயமடைந்தார்.
முன்னர் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பான முரண்பாட்டின் எதிரொலியாக, துன்னாலையை சேர்ந்த கும்பலொன்று இந்த ரௌடித்தனத்தில் ஈடுபட்டது.
சிறிய ரக கன்டர் வாகனமொன்றில் சென்ற 20 பேர் கொண்ட கும்பலால் இளைஞன் தாக்கப்பட்டார். தலை, காது, கை, கால்களில் காயமடைந்த அவர், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவரது பெறுமதியான கைத்தொலைபேசி, தங்கச்சங்கிலி என்பவற்றையும் அந்த கும்பல் திருடிச் சென்றது.




