வாகனம் பிடித்துப் போய் முன்பகை தீர்த்த கும்பல்: யாழில் கொடூர சம்பவம்!

Date:

வரணி பகுதியில் ஆலய திருப்பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் மீது சுமார் 20 பேர் கொண்ட இளைஞர் குழு நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (6) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.

வரணி மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள ஆலயத்தில் திருப்பணியில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரரான, கொக்குவிலை சேர்ந்த 26 வயதான இளைஞனே படுகாயமடைந்தார்.

முன்னர் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பான முரண்பாட்டின் எதிரொலியாக, துன்னாலையை சேர்ந்த கும்பலொன்று இந்த ரௌடித்தனத்தில் ஈடுபட்டது.

சிறிய ரக கன்டர் வாகனமொன்றில் சென்ற 20 பேர் கொண்ட கும்பலால் இளைஞன் தாக்கப்பட்டார். தலை, காது, கை, கால்களில் காயமடைந்த அவர், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவரது பெறுமதியான கைத்தொலைபேசி, தங்கச்சங்கிலி என்பவற்றையும் அந்த கும்பல் திருடிச் சென்றது.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்