நேற்று 184,695 பேருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, 31,323 நபர்களுக்கு ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது. 26,067 நபர்கள் இரண்டாவது டோஸை பெற்றனர்.
79,182 நபர்களுக்கு சினோஃபார்ம் முதல் டோஸ் வழங்கப்பட்டது. 6,878 பேருக்கு நேற்று இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.
41,156 நபர்கள் ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர், 76 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.
13 நபர்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.
இலங்கையில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 2,679,076 நபர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



