நேற்று 184,695 பேருக்கு தடுப்பூசி!

Date:

நேற்று 184,695 பேருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, 31,323 நபர்களுக்கு ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது. 26,067 நபர்கள் இரண்டாவது டோஸை பெற்றனர்.

79,182 நபர்களுக்கு சினோஃபார்ம் முதல் டோஸ் வழங்கப்பட்டது. 6,878 பேருக்கு நேற்று இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.

41,156 நபர்கள் ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர், 76 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.

13 நபர்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.

இலங்கையில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 2,679,076 நபர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்