அடுத்த வாரம் பிசிஆர் மற்றும் ரபிட் அன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
பிசிஆர் சோதனைகள் நடத்தும் 45 மருத்துவமனைகளும், அன்டிஜென் சோதனைகள் நடத்தும் 43 மருத்துவமனைகளும் 21 மாவட்டங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன.
சோதனைகள் வெவ்வேறு விலை விகிதங்களில் நடத்தப்பட்டது தெரியவந்தது.
அதன்படி, ஒரு பிசிஆர் சோதனைக்கு ரூ .5,000 முதல் ரூ .9,500 வரையும், அன்டிஜென் சோதனை ரூ .2,000 முதல் ரூ .5,900 வரையும் அறவிடப்பட்டுள்ளது தெரிய வந்தது.
எனவே அடுத்த வாரம் முதல் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அழகியவண்ண கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1