மகளை சீரழித்த தந்தைக்கு பிணை வழங்க இலஞ்சம்: நீதிமன்ற கழிப்பறைக்குள் கையும் மெய்யுமாக சிக்கிய பொலிஸ்காரர்!

Date:

சிறுமியை பாலியல் பலாத்காரப்படுத்திய சந்தேகநபரின் பிணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்காக, இலஞ்சம் வாங்கிய சாலியவெவ பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.

புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தின் கழிவறைக்குள் வைத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.

தனது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தந்தைக்கு பிணை வழங்குவதை எதிர்க்காமல் இருப்பதற்காக அவர் இலஞ்சம் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான நீதவான் விசாரணை இன்று (03) புத்தளம் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ள நிலையில், சந்தேகநபரின் தந்தையிடம் இலஞ்சம் கோரியதாக, ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது.

இதையடுத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் வழங்கப்பட்ட பணத்தை, சந்தேகநகரின் தந்தை, பொலிஸ் உத்தியோகத்தரிடம் வழங்கினார்.

நீதிமன்றத்தின் கழிவறையில் பொலிஸ் உத்தியோகத்தர் .லஞ்சத்தை பெற்ற போது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்