மட்டக்களப்பில் விளையாடியவர்களிற்கு பிசிஆர்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், விளையாட்டு நிகழ்வில் ஈடுபட்ட 17 இளைஞர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் உள்ள மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது அப்பகுதிக்கு சென்ற பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் க.ரமேஸ் தலைமையிலான சுகாதார குழுவினரும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் விளையாட்டு நிகழ்வினை தடுத்து நிறுத்தியதுடன், விளையாட்டு நிகழ்வில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கையினையும் விடுத்தனர்.

முகக்கவசங்கள் அணியாமலேயே நிகழ்வில் இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியவர்கள் பீசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் யாராவது தொற்றாளர்களாக இனங்காணப்பட்டால் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் க.ரமேஸ் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்