தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மேலும் சில பகுதிகள் இன்று (20) காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ கிராம சேவகர் பிரிவு மற்றும் கண்டி மாவட்டத்தின், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகரதொனிய ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



