31.9 C
Jaffna
April 20, 2024
குற்றம்

காதல் முற்றி தலைக்கேறிய காமம்: பெண் வைத்தியர் ஆடை மாற்றுவதை இரகசியமாக படம்பிடித்த வைத்தியர்!

ராகம வைத்தியசாலையில் பணிபுரியும் இளம்பெண் வைத்தியரை நிர்வாணமாக படம் பி  பிடித்த ஆண் வைத்தியர் தற்போது விளக்கமறியலில் உள்ளார். காதல் மயக்கத்திலேயே அவர் இந்த மோசமான செயலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சம்மாந்துறையை சேர்ந்த 35 வயதான அந்த வைத்தியர். அந்த வைத்தியசாலையில் இணைந்த இளம்பெண் வைத்தியரின் அழகில் மயங்கி, காதல் மயக்கம் கொண்டிருந்துள்ளார்.

இருவரும் மருத்துவ கல்லூரியில் ஒன்றாக கல்விகற்றவர்கள்.

ஆண் வைத்தியர் முன்னதாக ராகம வைத்தியசாலையில் பணியாற்றியுள்ளார். அப்போது, அங்கு பணிக்கு வந்த பெண் வைத்தியருடன் சில மாதங்கள் பணியாற்றியுள்ளார். அப்போதே, இளம் வைத்தியரின் அழகில் மயங்கி, காதல் வலை வீச முயன்றது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனினும், இந்த காதல் வலைகளை கண்டு கொள்ளாமல், கருமமே கண்ணாக இருந்துள்ளார் அந்த பெண் வைத்தியர்.

எனினும், பெண் வைத்தியரின் மனதை கவர தினமும் அவர் பிரயத்தனப்பட்டுள்ளார். எனினும், தனது காதலை சொல்லும் தைரியமும், சந்தர்ப்பமும் அவருக்கு கிடைக்கவில்லை.

அந்த நேரத்தில், ஆண் வைத்தியர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மனதிலிருந்த காதலியை விட்டு செல்வது அவருக்கு சிரமமாக இருந்தது. எனினும், வேறு வழியின்றி கொழும்பிற்கு மாற்றாகி சென்றுள்ளார்.

கொழும்பிற்கு பணிக்கு வந்த பின்னர், அடிக்கடி தொலைபேசியில் பெண் வைத்தியரை அழைத்து பேசியுள்ளார். நாளடைவில் தினமும் அழைத்து அவர் பற்றி விசாரிக்க ஆரம்பிக்க, பெண் வைத்தியர் அதை தொந்தரவாக கருத ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து, அவர் ராகம வைத்தியசாலைக்கு வரத் தொடங்கியுள்ளார்.

எந்த பணியுமில்லாமல் ராகம வைத்தியசாலைக்கு செல்லும் அவர், எதிர்பாராதவிதமாக சந்திப்பதை போல பெண் வைத்தியரின் முன்பாக சென்று வருவார்.

இப்படி பலவித வித்தை காண்பித்தும் பெண் வைத்தியரின் மனதை வெல்ல முடியாமல் திண்டாடி வந்துள்ளார்.

நாளுக்கு நாள் அந்த பெண் வைத்தியரின் மீதான காதலும், காமமும் அதிகரித்து, தன்னை கட்டுப்படுத்த முடியாதவராக மாறினார்.

காதலை சொல்லி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்ற நிலையில், கடந்த 10ஆம் திகதி இரவு ராகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அப்போது இரவு 8 மணியை கடந்திருந்தது.

பெண் வைத்தியர் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். அவர் பணி முடித்து விடுதி திரும்பும் நேரத்தை, ஆண் வைத்தியர் அறிந்திருந்தார்.

பெண் வைத்தியர் விடுதிக்கு திரும்பி, தனது ஆடைகளை களைந்து விட்டு குளிக்கச் சென்றார். தனி விடுதியென்பதால், குளித்து விட்டு நிர்வாண நிலையிலேயே வெளியில் வந்துள்ளார். விடுதியின் ஜன்னலோரம் மறைந்து நின்று இவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஆண் வைத்தியர், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாணமாக வந்த பெண் வைத்தியரை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்தார்.

அப்போது அவர் புகைப்படம் எடுக்க வசதியாக சிறிது நகர்ந்த போது,  தடுமாறு தட்டுப்பட்டு, சிறிய சத்தம் எழுந்தது. அதன்பின்னரே ஜன்னல் பக்கம் பார்த்தார். ஒருவர் கையடக்க தொலைபேசியை வைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

துண்டால் உடலை மறைத்துக் கொண்டு நெருங்கிச் சென்று பார்த்தார். தனக்கு தெரிந்த வைத்தியர்!

அறைக்குள் சென்று துணியொன்றால் உடலை மூடிக்கொண்டு வந்து, கையடக்க தொலைபேசியில் படம் எடுத்தாரா என வினவினார்.

ஆண் வைத்தியர் மறுத்தார்.

அவரிடமிருந்து கையடக்க தொலைபேசியை பறித்து பார்த்தார். எனினும், அந்த புகைப்படங்களை அவரால் மீட்க முடியவில்லை.

பின்னர் புகைப்படம் எடுத்ததை ஒப்புக் கொண்ட ஆண் வைத்தியர், தன்னை காதலித்தால் அவற்றை அழிப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன், அவரது நிர்வாணத்தை தான் தினமும் பார்க்க வேண்டும் என நிதானமிழந்து பேசியுள்ளார்.

பெண் வைத்தியர் பல முறை கெஞ்சியும், அதை கணக்கெடுக்காமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

இதையடுத்து பெண் வைத்தியர் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து, ஆண் வைத்தியர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டன. அவற்றில் பெண்களின் அந்தரங்கப்படங்கள் காணப்பட்டன.

வைத்தியர் தம்மையும் அந்தரங்கமாக புகைப்படம் எடுத்ததக வேறு இரண்டு பெண்களும் முறையிட்டிருந்தனர்.

வைத்தியர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பழங்கால அம்மன் சிலையுடன் முன்னாள் போராளி கைது!

Pagetamil

யாழில் போதைப்பொருள் வாங்குவதற்காக திருடிய இளைஞன் பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கினார்!

Pagetamil

43 வயது மனைவி கொலை: 25 வயது கணவன் சந்தேகத்தில் கைது!

Pagetamil

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 56 வயது ஆசாமிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாமியை கொன்று கொள்ளையடித்த மருமகன் கைது!

Pagetamil

Leave a Comment