வவுனியாவில் பாடசாலை சமூகத்தினர் 3025 பேருக்கு 12ம் திகதி முதல் கோவிட் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

Date:

வவுனியா மாவட்டத்தில் பாடசாலையில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட 3025 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இம்மாதம் 12ம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், வவுனியா மாவட்டத்தில் 2802 ஆசிரியர்களும், 205 அதிபர்களும், 198 பாடசாலை மற்றும் வலயத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில் வவுனியா வடக்கு வலயத்தில் நெடுங்கேணி பகுதியில் 358 பேரும், ஓமந்தை பகுதியில் 568 பேருமாக 926 பேருக்கும், வவுனியா தெற்கு வலயத்தில் தெற்கு சிங்கள பிரிவில் 383 பேருக்கும், தெற்கு தமிழ் பிரிவில் 1419 பேருக்கும், வெண்கல செட்டிக்குளம் பிரிவில் 477 பேருக்குமாக 2279 பேருக்கும் என மொத்தமாக 3205 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...

நடிகை ட்விஷா உடலில் பல்வேறு காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

நடிகை ட்விஷா சர்மா உடலில் பல்​வேறு காயங்​கள் இருந்​த​தாக பிரேத பரிசோதனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்