உலக சாதனை புரிந்துள்ள யோகா சிறுமி!

Date:

கண்களைக் கட்டிக்கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்த நெல்லை சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பிரிஷா , 11 வயதாகும் இவர் கேடிசி நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இதுவரை யோகாவில் 41 சாதனைகள் புரிந்துள்ளார். நீச்சல் அடித்துக்கொண்டு யோகா செய்வதிலும் வல்லவர். இதற்கும் ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ளார்.

மேலும் உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர் என்ற பட்டத்தையும் மத்திய அரசின் NCPCR பிரிஷாவுக்கு வழங்கி பாராட்டியுள்ளது. உலகில் முதல் கௌரவ டாக்டர் என்ற பட்டத்தை நியூஜெருசலேம் பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்துள்ளது. உலகில் முதல் அதிக உலக சாதனை புரிந்தவர் என்ற பட்டத்தை குளோபல் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியுள்ளது.

இவர் கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைன் மூலம் யோகா வகுப்பு எடுத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். முதியவர்கள், பார்வையற்ற மாணவர்கள், புதுச்சேரியில் உள்ள தமிழ்நாடு என்.சி.சி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு மாணவர்களுக்கும், காவல்துறைக்கும் இலவசமாக யோகா வகுப்பு தினமும் எடுத்து வருகிறார்.

மேலும் பள்ளி வகுப்பு முடிந்தவுடன் பார்வையற்ற மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு பிரத்தியோகமாக இலவசமாக யோகா கற்பித்து வருகிறார்.

இந்நிலையில் மேலும் ஒரு உலக சாதனைக்காக கண்களைக் கட்டிக்கொண்டு யோகசனங்கள் செய்வது (ரூபிக்ஸ்க்யூ, ப்ரைன் விட்டா) ஐந்து நிமிடத்தில் கைகளால் அதிவேகமாக சைக்கிள் ஓட்டுவது, கை விரல்களின் இடுக்கில் கத்தியால் குத்துவது, கண்களை கட்டிக்கொண்டு ஒரு நிமிடத்தில் விபரீத சலபாசனம் மூலம் ஆரஞ்சு பழங்களை கிண்ணத்தில் வைப்பது என 29 ஆசனங்களை செய்து உலக சாதனை புரிந்துள்ளார்.

வேர்ல்ட் ரெக்கார்டிங் பதிவாக இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறு வயதிலேயே கண்களை கட்டிக்கொண்டு பல்வேறு ஆசனங்களை மேற்கொண்ட சிறுமியின் சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்