31.9 C
Jaffna
April 20, 2024
இலங்கை

சுகாதார அமைச்சிற்கு ஆறு மில்லியன் பெறுமதியான பி.சீ.ஆர் இயந்திரம் அன்பளிப்பு

கொரானா நோயினைக் கட்டுப்படுத்துவதில் அந்த நோய் தொற்றியவர்களை
மிகவிரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்தி தேவைப்படும்போது விரைவாக சிகிச்சை
அளிப்பது ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. நோய்த் தொற்றினை
கண்டறிவதற்கு பி.சி.ஆர் இயந்திரம் அவசியமாகும்.

முழு நாடும் கொரானாவிற்கு எதிராக போராடும் தற்போதைய காலகட்டத்தில் தமது
சமூகப் பொறுப்பினை உணர்ந்து திரு S.T.S அருளானந்தன் (தலைவர், இலங்கை
கட்டடப் பொருள் வணிகர் கழகம்) மற்றும் இணைப்பாளர் திரு S சண்முகநாதன்
ஆகியோர் எடுத்த முன்முயற்சியை அடுத்து இலங்கை கட்டடப் பொருள் வணிகர்
கழகத்தினரால் (Ceylon Hardware Merchants Association) ஆறு மில்லியன்
பெறுமதியான பி.சி.ஆர் இயந்திரம் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சில் நேற்று (07.07.2021) திரு S.T.S அருளானந்தன் திரு H.M.
ஐயவீர (செயலாளர் இலங்கை கட்டடப் பொருள் வணிகர் கழகம்) மற்றும் திரு S.
சண்முகநாதன் ஆகியோரினால் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் முனசிங்க,
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன
ஆகியோரிடம் பி.சி.ஆர் இயந்திரமானது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதன்போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகங்களான வைத்தியர்
S.சிறிதரன் மற்றும் வைத்தியர் S. தர்மரத்ன ஆகியோரும் உடனிருந்தனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப் பல்கலையின் உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி

Pagetamil

வேலணையில் அன்னை பூபதி நினைவு நிகழ்வு

Pagetamil

ஐக்கிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்திற்கு மறைமுக தடையா?

Pagetamil

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளம் ஆசிரியை கைது!

Pagetamil

அலுவலக நேரத்திற்கு முன்பாக படிப்படியாக மூடப்படும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம்; மக்கள் அசௌகரியம்: பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு

Pagetamil

Leave a Comment