தண்ணீர் குடித்துவிட்டு படுத்துறங்கிய 5 பிள்ளைகளின் தயார் திடீரென இறந்துள்ளார்.
வடமராட்சியின், துன்னாலை, இந்திரம்மன் கோயிலடியைச் சேர்ந்த சிவராசா வனஜா (43) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் உணவருந்திய போது வாந்தி எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் சாதாரண நிலைக்கு திரும்பியதால் வீட்டில் தங்கிருந்தார். அதன் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் பிள்ளைகளுக்கு தேநீர் வழங்கிவிட்டு தானும் குடித்துவிட்டு கட்டிலில் படுத்து உறங்கியபோது அவரின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.
இதை அவதானித்த உறவினர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவரை கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்



